சோயா/ மீல் மேக்கரில் புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந்து பால் எடுக்குக்கும்போது கிடைக்கும் சக்கையை உலர செய்து சோயாவை தயார் செய்கிறார்கள் . எனவே பல அசுத்தங்கள் அதில் இருக்கும். எனவே வேகவைத்தவுடன் ஒரு முறைக்கு 2-3 முறைக்கு அதனை அலச வேண்டும். மேலும் சோயாவில் உள்ள தண்ணீரை நன்கு பிழிந்தால்தான் மசாலாவின் சுவை அதனுள் நன்கு இறங்கும்.
இந்த குழம்பு என் சொந்த செய்முறையை . நான் தோராயமாக பொருட்களை தேர்வு செய்து மதிய உணவிற்கு இதை முயற்சி செய்தேன் . இது அற்புதமாய் இருந்தது. செட்டிநாடுட் டிஷ் போன்ற ருசி இதில் இருந்தது . சாதத்துடன் இது நன்றாக இருந்தது . இது சப்பாத்தி மற்றும் பிரியாணி அல்லது பூலாவோவுடன் நன்கு இருக்கும். இது இறைச்சிக்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கும். சாதத்தில் நெய்யோடு இதை உண்டால் மட்டன் போன்று சுவைக்கும் . எல்லாவற்றிலும், இந்த செய்முறையில் குறைந்த எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது . இது டயட்டில் உள்ளவர்களுக்கு சுவையான விருந்து.
TO READ THIS RECIPE IN ENGLISH, CLICK HERE.
TO READ THIS RECIPE IN ENGLISH, CLICK HERE.
தேவையான பொருட்கள்
அரைக்க
- சோயா/ மீல் மேக்கர் - 1/2 கப்
- சின்ன வெங்காயம் - (8-10)
- தக்காளி - 2
- சீரகம்- 1 தேக்கரண்டி
- சோம்பு/ பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
- மிளகு - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 4
- கொத்தமல்லி விதை - 3 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - (2-3)
- தேங்காய் சில் - 1 1/2 தேக்கரண்டி
- உப்பு - சுவைக்கைக்கேற்ப
தாளிக்க
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை
- வாணலியில் சோயா/ மீல் மேக்கர் மற்றும் தண்ணீரை சேர்க்கவும். சிறிது உப்பை சேர்க்கவும். 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். மீல் மேக்கரின் அளவு கூடி இருக்கும். அதனை ஆற விடவும். தண்ணீரை வடிகட்டி நன்கு அலசவும் , சோயாவில் உள்ள அதிகமான நீரை நன்கு பிழிந்து எடுக்கவும்.
- வாணலியில் சீரகம், பெருஞ்சீரகம், மிளகு, கொத்தமல்லி விதைகள் மற்றும் மிளகாய் வற்றலை வறுக்கவும்.
- அதனுடன் முழு சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்.
- நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும். இந்த கலவையை ஆற விடவும்.
- மிக்ஸியில், வெங்காய- தக்காளி கலவையுடன் தேங்காய் சில்லை சேர்க்கவும்.
- அதனை மைய அரைக்கவும்.
- வாணலியில் எண்ணெய்யை காயவிடவும்.
- கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
- உளுத்தம் பருப்பு பொன் நிறமாக மாறிய பின் , அரைத்த கலவைவுடன் சிறிது தண்ணீரை இதில் சேர்க்கவும்.
- தேவைக்கு ஏற்ப உப்பை சேர்க்கவும்.
- பிழிந்த மீல் மேக்கரை அதனோடு சேர்த்து 3-5 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
- நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரிக்கவும்.
- சப்பாத்திவுடன் அல்லது சாதத்துடன் சூடாக பரிமாறவும்.
TO READ THIS RECIPE IN ENGLISH, CLICK HERE.
குறிப்பு
- விருப்பப்பட்டால், சோயாவில் உள்ள நீரை நன்கு பிழிந்து எடுத்தவுடன் 2 அல்லது 4 துண்டுகளாக நறுக்கிக்கொள்ளலாம்.
- சிறிய அளவு மீல் மேக்கர் கூட கடைகளில் கிடைக்கிறது. அதை கூட உபயோகிக்கலாம்.
- தேங்கையை வெங்காயத்தோடு சேர்த்து வதக்கிக்கொள்ளலாம். சுவை சிறிது மாறுபடும்.
- ஒரு மாறுபாட்டிற்காக, ஏலக்காய, இலவங்கப்பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை மற்றும் அண்ணாச்சி பூ/ மூக்கு ஆகியவற்றை சோம்போடு சேர்த்து வறுத்துக்கொள்ளலாம்.
- சோயாவில் உள்ள தண்ணிரை நன்கு பிழிந்து எடுப்பதால் மசாலாவை அது நன்கு கிரகித்துகொள்ளும். தேவைக்கு ஏற்ப தண்ணீர் மற்றும் சுவைஓட்டிகளை சேர்க்கவும்.
No comments:
Post a Comment