வேர்க்கடலை சட்னி பல விதங்களில் தயாரிக்கலாம். இந்த செய்முறையில் எந்த பருப்பும் பயன்படுத்தப்படவில்லை. மறுபாட்டிற்கு 'குறிப்பு' பகுதியை படிக்கவும். ஒரு முறை தயாரிக்கப்பட்டால் 2 மணி நேரத்திற்குள் சாப்பிடுவது சிறந்தது. 2 மணி நேரம் கழித்து சுவை குறையக்கூடும்.
தேவையான பொருட்கள்
- பச்சை கடலை/வேர்க்கடலை - 1/2 கப்
- சின்ன வெங்காயம் - 2
- பூண்டு - 2
- மிளகாய் வற்றல் - 2
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- புளி - 1 தேக்கரண்டி
- பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - 2 தேக்கரண்டி அல்லது சுவைக்கு ஏற்ப
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 4
- கறிவேப்பிலை - 2
செய்முறை
- வேர்க்கடலையை வாணலியில் வறுக்கவும்.
- வறுத்த வேர்க்கடலையை ஆறவிடவும்.
- வேர்க்கடலையின் தோலை நீக்கி தனியே வைத்து கொள்ளவும்.
- வாணலியில் சிறிது எண்ணெய்யை காயவிடவும். அதில், சீரகம், வெங்காயம், பூண்டு, புளி, உப்பு, பெருங்காயம் மற்றும் சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். 2 நிமிடங்கள் வதக்கிய பின் ஆற விடவும்.
- மிக்ஸியில் வேர்கடலையோடு வதக்கிய வெங்காய கலவையை சேர்க்கவும்.
- சிறிது தண்ணீர் ஊற்றி சட்னி பதத்திற்கு அரைக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
தாளிப்பதற்கு
- தாளித்ததை சட்னியோடு சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு
- வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தாதவர்கள், உளுத்தம் பருப்பு அல்லது கடலை பருப்புபை சிவப்பு மிளகாய் அல்லது பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையோடு சேர்த்து வதக்கி வறுத்த வேர்கடலையோடு சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.
- புளி சேர்க்க விருப்பம் இல்லையென்றால் அதனை தவிர்க்கலாம் அல்லது புளிக்கு பதிலாக தக்காளியை உபயோகிக்கலாம்.
- விருப்பப்பட்டால், வேர்க்கடலையின் தோலை நீக்காமல் கூட உபயோகிக்கலாம். அது கொஞ்சம் கசப்பாக இருக்கக்கூடும்.
- மாறுதலுக்கு தேங்காயை பச்சையகவோ அல்லது வெங்காயத்துடன் வதக்கியோ வேர்கடலையுடன் அரைத்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment