தக்காளி குழம்பு ஒரு பிரபலமான சௌராஷ்ட்ரா உணவு ஆகும். இட்லி மற்றும் தோசையுடன் இந்த குழம்பு நன்றாக இருக்கும். சௌராஷ்ட்ரா மக்களின் திருமண விழாவில் அல்லது ஏதாவது விசேஷங்களில் இந்த குழம்பு நிச்சயம் தயார் செய்யப்படும். எனக்கு இந்த குழம்பு மிகவும் பிடிக்கும். இது தயாரிப்பது மிகவும் சுலபம்.
To Read this Recipe in English, Click Here
தேவையான பொருட்கள்
- வெங்காயம் - 1
- தக்காளி - 3
- பச்சை மிளகாய் - 2
- குழம்பு பொடி / - 2 1/2 மேஜை கரண்டி
- கறிவேப்பிலை - 1
- கொத்தமல்லி இலை - 2
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- உப்பு - சுவைக்கு ஏற்ப
- நல்லெண்ணெய் - 3 மேஜை கரண்டி
- குக்கரில் எண்ணெய்யை காயவிடவும்.
- கடுகை சேர்க்கவும்.
- உளுத்தம் பருப்பை சேர்த்து பொன் நிறமாக மாறும் வரை வறுக்கவும்.
- சீரகத்தை சேர்க்கவும்.
- நீளமாக வெட்டியா வெங்காயத்தை சேர்க்கவும்.
- நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும்.
- கறிவேப்பிலையை சேர்க்கவும். வெங்காயம் பொன் நிறமாக மாறும் வரை வறுக்கவும்.
- நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பை சேர்த்து தக்காளியை எண்ணெய் வெளிவரும் வரை வதக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் குழம்பு பொடியை எடுத்துக்கொள்ளவும்.
- 1/2 கப் தண்ணீரை ஊற்றவும்.
- கட்டி இல்லாதவாறு நன்கு கலக்கவும்.
- கரைத்து வாய்த்த குழம்பு பொடியை வெங்காய- தக்காளி கலவையோடு சேர்க்கவும்.
- தேவையான அளவு தண்ணீரை உற்றி கொதிக்க விடவும்.
- குக்கரை மூடவும். 1 விசில் வந்தவுடன் சிறு தீயில் 1 விசில் வரவிடவும். பிரஷரயை தானாகவே வெளியேற விடவும்.
- நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரிக்கவும்.
- தோசை அல்லது இட்லி உடன் சூடாக பரிமாறவும்.
To Read this Recipe in English, Click Here
குறிப்பு
- உப்பு மற்றும் காரத்தை விருப்பத்திற்கு ஏற்றவாரு மாற்றிக்கொள்ளலாம்.
- நல்லெண்ணெய் இதற்க்கு கூடுதல் சுவை கொடுக்கும்.
- கரம் குறைவாக வேண்டும் என்றல் பச்சை மிளகாயை தவிர்க்கலாம்.
- இங்கே உபயோகப்பட்டுள்ள குழம்பு பொடி சௌராஷ்ட்ரா மக்களின் பணியில் செய்த குழம்பு பொடி. வேற குழம்பு பொடி சேர்த்தால் சுவை மாறுபடும்.
No comments:
Post a Comment